Home இலங்கை சஹ்ரான் குறித்தும்  தாக்குதல் தொடர்பிலும்  அறிவித்தும் கவனம் செலுத்தப்படவில்லை…

சஹ்ரான் குறித்தும்  தாக்குதல் தொடர்பிலும்  அறிவித்தும் கவனம் செலுத்தப்படவில்லை…

by admin

 தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலைவர்…

இலங்­கையில் பயங்­க­ர­வாத தாக்­குதல் ஒன்று இடம்­பெ­றப்­போ­கின்­றது என்ற கார­ணியை பாது­காப்பு செய­லா­ள­ ருக்கும், காவற்துறை மா அதிபருக்கும் எடுத்துக் கூறி­ய ­போ­திலும் அது குறித்து கவனம் செலுத்­த­ப்ப­ட­வில்லை.

தாக்­குதல் நடத்­தப்­படும் வரையில் பாது­காப்பு சபைக் கூட்­டத்தை கூட்­ட­வில்லை என்று தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் தெரி­வித்தார்.

சஹ்ரான் குறித்த தக­வல்­க­ளையும் சிரியா சென்­ற­வர்கள் இலங்கைக்கு வரு­கின்­றார்கள் கைது செய்து விசா­ரிக்­கலாம் என்றும் பல சந்­தர்ப்­பங்­களில் தெரியப்படுத்தினேன் ஆனால் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்து விசா­ரணை செய்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவின் முத­லா­வது அமர்வு நேற்று காலை பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் நடை­பெற்­றது. பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி நாட்டில் இல்­லாத கார­ணத்­தினால் கலா­நிதி ஜெயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன தலை­மையில் நேற்­றைய கூட்டம் நடத்­தப்­பட்­டது. இதில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்­காக அழைக்­கப்­பட்ட தேசிய புல­னாய்­வுப்­பி­ரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் தெரி­வுக்­குழு முன்னால் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் இந்த தக­வல்­களை கூறினார்.

இங்கு அவர் மேலும் சாட்­சி­ய­ம­ளிக்­கும்­போது, இலங்­கையில் தாக்­குதல் ஒன்று நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இடப்­பட்ட கடிதம் ஒன்று 7 ஆம் திகதி எனக்குக் கிடைத்­தது. எங்­கி­ருந்து வந்­தது, யார் அனுப்­பி­யது என்ற விப­ரங்கள் அதில் இருக்­க­வில்லை. ஆனால் மத தலங்கள், ஹோட்­டல்கள் மற்றும் இந்­திய  உயர்ஸ்தானிகர்  ஆலயம் ஆகி­யன தாக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அதில் தகவல் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்த தக­வலை ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி காலை 11 மணிக்கு பாது­காப்பு செய­லா­ள­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தினேன். அந்த நாளில் (8 ஆம் திகதி) இந்­திய பாது­காப்பு செயலாளர்  இலங்­கைக்கு வந்­தி­ருந்தார். அன்­றைய தினம் எமது பாது­காப்பு செய­லா­ள­ருக்கும் இந்­திய பாது­காப்பு செய­லா­ள­ருக்கும் இடையில் காலையில் 10  மணியளவில்  சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது.

அந்த சந்­திப்பு நண்­பகல் வரையில் நீடித்­தது. ஆகவே அன்­றைய தினம் என்னால் பாது­காப்பு செய­லா­ளரை சந்­திக்க முடி­ய­வில்லை. ஆனால் தக­வலை கொடுத்திருந்தேன். அடுத்த நாள் 9 ஆம் திகதி தேசிய புல­னாய்வுப் பிரிவின் கூட்டம் இடம்­பெற்­றது. இதில் இந்த தாக்­குதல் குறித்த தகவல் தொடர்பில் முக்­கி­ய­மா­கவும் பிர­தா­ன­மா­கவும் பேசி­யி­ருக்க வேண்டும். ஆனால் அன்­றைய தினம் இது குறித்து பேசப்­ப­டவே இல்லை.

மீண்டும் நினை­வூட்­டினேன்

அந்த கூட்­டத்தில் என் அருகில் பாது­காப்பு செய­லாளர் இருந்தார். ஆகவே நான் எனது கோப்­பு­க­ளுக்கு மேல் இந்த கடிதம் குறித்த அறிக்­கையை வைத்­தி­ருந்து இது குறித்து பேச வேண்டும் என பாது­காப்பு செய­லா­ள­ருக்கு தெரி­வித்தேன். அதனை ஏனை­ய­வர்கள் கவ­னித்­தி­ருக்க வாய்ப்­பில்லை. ஆனால் பாது­காப்பு செய­லாளர் இதனை காவற்துறை  மா அதி­ப­ருக்கு அறி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் நீங்­களும் ஒரு­முறை நினை­வு­ப­டுத்தி விடுங்கள் என்று கூறி சாதா­ர­ண­மாக அதனை தட்டிக்கழித்தார். அதன் பின்னர் இந்த பிர­தி­யொன்றை காவற்துறை  மா அதி­ப­ருக்கும் நான் வழங்­கினேன்.

அதன் பின்னர் இந்த விடயம் குறித்து எவரும் அக்­கறை கொண்­ட­தாக எனக்கு தெரி­ய­வில்லை. என்­னிடம் இது குறித்து எவரும் வின­வவும் இல்லை. காவற்துறை  மா அதிபர் தக­வலை அறிந்­தி­ருந்த கார­ணத்­தினால் நான் அதன் பின்னர் அவ­ரிடம் வின­வவும் இல்லை. ஆனால் நான் காவற்துறை  மா அதி­ப­ருக்கு வழங்­கிய கடி­தத்தில் (eyesolny) என்று குறிப்­பிட்டு அனுப்­பினேன்.

இந்த வார்த்தை ஒரு இர­க­சிய குறி­யீ­டாக நாம் பயன்­ப­டுத்தும் ஒன்­றாகும். இந்த விட­யத்­திற்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுங்கள் என்று இதற்கு அர்த்தம். ஆனால் அதன் பின்னர் 21 ஆம் திகதி தாக்­குதல் நடத்­தப்­படும் வரையில் இது குறித்து பேசவும் இல்லை. தேசிய பாது­காப்பு சபைக் கூட்டம் ஒன்று கூட்­ட­ப­டவும் இல்லை. பாதுகாப்பு  செய­லாளர் பாது­காப்பு குழுக் கூட்­டத்தை கூட்­ட­வில்லை.

உண்­மையை கூற­வேண்டும் என்றால் வாரத்­திற்கு ஒரு தடவை பாது­காப்பு சபைக் கூட்டம் கூட்­டப்­பட வேண்டும். ஆனால் மாதம் ஒன்று என்ற வகையில் தான் பாதுகாப்புச் சபைக் கூட்டம் கூடி­யது. தாக்­குதல் நடத்­தப்­பட முன்னர் இறு­தி­யாக இந்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 19 ஆம் திக­தியே பாது­காப்பு சபைக் கூட்டம் கூடி­யது. அதன் பின்னர் 22 ஆம் திகதி அதா­வது தாக்­குதல் இடம்­பெற்ற அடுத்த நாள் ஜனா­தி­பதி தலை­மையில் கூடி­யது. தாக்­குதல் நடந்­துள்­ளது. யார் நடத்­தி­யது என்ற காரணிகள்  மாத்­திரம் பேசப்­பட்டு வரு­கின்­றதே தவிர உண்­மை­யான கார­ணிகள் நான் கூறிய விட­யங்கள் குறித்து இன்­று­வரை அக்­கறை செலுத்­தப்­பட்­ட­தாக இல்லை.

நான் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் பத­வியை ஏற்­று­கொண்­டதில் இருந்து இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத அமைப்பு குறித்து (isis) ஆராய்ந்து வரு­கின்றேன். உலகில் நடக்கும் செயற்­பா­டுகள் குறித்து கண்­கா­ணித்து வரு­கின்றேன். இலங்­கையில் காத்­தான்­கு­டியில் ஒரு தாக்­குதல் சம்­பவம் இரு முஸ்லிம் குழுக்கள் இடையில் ஏற்­பட்­டது. அப்­போதில் இருந்து இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் மற்றும் இந்த சம்­பவம் குறித்து இணைத்து பார்த்­துள்ளேன்.

சிரியா சென்று வந்­தோரை விசா­ரிக்­கு­மாறு கோரினேன்

மேலும் இலங்­கையில் சிலர் சிரியா சென்­றுள்­ளது கண்­ட­றி­யப்­பட்ட பின்னர் அவர்கள் மீண்டும் இலங்­கைக்கு வரு­கின்ற தகவல் கிடைத்­தது. அவர்­களை கைது­செய்து விசா­ரிக்க வேண்டும் என்­ப­தையும் நான் வலி­யு­றுத்­தி­யுள்ளேன். வாராந்தம் செவ்­வாய்க்­கி­ழமை கூடும் புல­னாய்வு கூட்­டத்­திலும் அவ்­வப்­போது கூடிய பாது­காப்பு சபைக் குழுக் கூட்­டத்­திலும் தெரி­வித்­துள்ளேன். ஆனால் அவர்­களை கைது­செய்ய சட்டம் இல்லை என்ற கார­ணிகள் கூறப்­பட்­டது. அவர்­களை எவ்­வாறு விசா­ரிப்­பது என்­பது குறித்து ஆரா­ய­வேண்டும் என்ற பதில் கிடைத்­தது.

சஹ்ரான் குறித்தும் தகவல் வழங்­கினேன்

2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 9 ஆம் திகதி இது குறித்து காவற்துறை  மா அதி­ப­ருக்கு கடிதம் ஒன்றின் மூலம் தெரி­வித்தேன். அதனை கருத்தில் கொள்­ள­வில்லை. சில தினங்­களில் முதல் அனுப்­பிய கடி­தத்தை நினை­வு­ப­டுத்தி மீண்டும் கடிதம் அனுப்பினேன். ஆனால் இது குறித்து அவ்வப்போதும் பேசப்பட்டதே தவிர அதனை தாண்டிய நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக கூற முடியாது. அதேபோல் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி சஹ்ரான் குறித்து தனிப்பட்ட தகவல் ஒன்றினை தயாரித்து குற்றப்புலனாய்வு பிரிவு, பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் காவற்துறை  மா அதிபருக்கு தெரிவித்துள்ளேன். ஆனால் இதற்கான விசாரணைகள் ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து என்னால் எதையும் தெரிவிக்க முடியாது. எனக்கு இது குறித்து ஒன்றும் தெரியவில்லை என்றார். #தேசியபுலனாய்வுப்பிரிவின்தலைவர் #காவற்துறைமாதிபர் #சிசிரமென்டிஸ் #சஹ்ரான் #ISIS #சிரியா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More