Home இலங்கை தனமல்வில பெருந்தொகையான கைகுண்டுகள், ஆயுதங்கள் மீட்பு…

தனமல்வில பெருந்தொகையான கைகுண்டுகள், ஆயுதங்கள் மீட்பு…

by admin

தனமல்விலையின் குமாரகம சந்திக்கருகாமையில் மூடப்பட்ட குழியொன்றிலிருந்து வெடிமருந்துகள் கொண்ட பொதியொன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மூடப்பட்ட குழியொன்றிலிருந்த மீட்கப்பட்ட பொதியில் டெட்டனேட்டர்கள், 195 கைகுண்டுகள்,  250அமோனியம் னைட்டிரேட், கிராம் பிளக் பவுடர் 50 கிராம், டி. 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் சன்னங்கள் ஐந்து உள்ளிட்ட பெருந்தொகையிலான இரும்புத் துகள்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர புலன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை சம்பவம் தொடர்பில் இதுவரை  எவரும் கைது செய்யப்படவில்லையென தனமல்விலைக் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். #கைகுண்டுகள் #ஆயுதங்கள் #டெட்டனேட்டர்கள் #தனமல்வில

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More