Home உலகம் இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டாவுக்கு உயரிய மனித உரிமைகள் விருது…

இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டாவுக்கு உயரிய மனித உரிமைகள் விருது…

by admin

லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கிற்கு சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் உயரிய மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பாடசாலை மாணவர்களை வைத்து சுவீடன் நாட்டு பாராளுமன்றத்தின் முன்னால் விழிப்புணர்வு போராட்டத்தை கிரேட்டா தன்பெர்க் நடத்தியிருந்தார். இது பிரேசில், உகாண்டா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள வளர்ந்து வரும் இளம் ஆர்வலர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், லண்டனில் சர்வதேச பொதுமன்னிப்பு சபை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிரேட்டாவுக்கும், அவரது தலைமையிலான எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமைகள் இயக்கத்திற்கும் சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் உயரிய மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த கிரேட்டா உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதற்காக போராடுங்கள். இந்த இயக்கத்தில் உள்ள அனைவரும் இதையே செய்கிறார்கள். இந்த பருவநிலை மாற்றத்தினால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் உலகின் தெற்கு பகுதியில் உள்ளவர்கள்தான். எனினும் பருவ நிலை மாற்றத்தில் அவர்களின் பங்கு மிகமிக குறைவு. இந்த அநீதிக்கு எதிராகத்தான் நாம் குரல் எழுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். #சுவீடன் #லண்டன் #சர்வதேசபொதுமன்னிப்பு சபை #பருவநிலைமாற்றம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More