Home இந்தியா இந்தியா – மாலைதீவுக்கிடையே படகு போக்குவரத்து – ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா – மாலைதீவுக்கிடையே படகு போக்குவரத்து – ஒப்பந்தம் கையெழுத்து

by admin

இந்தியா மற்றும் மாலைதீவுக்கிடையே படகு போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் மாலைதீவுகக்கு இந்தியாவில் இருந்து விமான போக்குவரத்து நடைபெற்று வருகின்ற நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து படகு போக்குவரத்தையும் ஆரம்பிக்க இருநாடுகளும் திட்டமிட்டிருந்தன.

இந்த நிலையில் 2 நாள் பயணமாக நேற்றையதினம் மாலைதீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு ஜனாதிபதி இப்ராகிம் முகமதுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இருநாடுகளுக்குமிடையே படகு போக்குவரத்தை தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டு இறுதியில் இந்த திட்டம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது

இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான படகு போக்குவரத்தை விரைவில் தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபடுமாறு அதிகாரிகளை இரு தலைவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

#இந்தியா  #மாலைதீவு #படகு போக்குவரத்து #ஒப்பந்தம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More