Home இந்தியா ஹிந்தி மொழிக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்சியில் பல இடங்களில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளளன

ஹிந்தி மொழிக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்சியில் பல இடங்களில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளளன

by admin


ஹிந்தி மொழிக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்சி புகையிரத நிலைய நடைபாதை மேம்பாலம் மற்றும் புகையிரதங்களில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் ஹிந்தி மொழி கட்டாயம் படிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அதனை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற்று, 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து அதனை படிக்கலாம் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களான தலைமை தபால் நிலைய அலுவலகத்தின் பெயர் பலகை, தபால் பெட்டிகள், பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் பெயர் பலகை, விமான நிலையத்தின் வெளியே அறிவிப்பு பலகை ஆகியவற்றில் எழுதப்பட்டிருந்த ஹிந்தி எழுத்துகள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், திருச்சி புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விரைவு புகையிரதம் மற்றும் நடை மேம்பாலத்திலுள்ள தகவல் பலகை பல இடங்களில் காணப்பட்ட ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

#ஹிந்தி #மொழி  #திருச்சி  #எழுத்துகள்  #அழிக்கப்பட்டுள்ளளன

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More