Home உலகம் நிரவ் மோடியை சிறை வைக்க மும்பை சிறையில் அறை தயார்

நிரவ் மோடியை சிறை வைக்க மும்பை சிறையில் அறை தயார்

by admin

லண்டன் சிறையில் இருக்கும்  நிரவ் மோடியை சிறை வைக்க மும்பை சிறையில் அறை தயாராகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நஷனல் வங்கி கிளையில் சுமார் 13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றிருந்தார்.

இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமுலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை கைது செய்துள்ள லண்டன் காவல்துறையில் சிறையில் அடைத்துள்ளனர்.
அவருக்கு பிணை வழங்க லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றமும் மறுத்துள்ள நிலையில் அவரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு அவர் நாடு கடத்தி கொண்டு வரப்படும் பட்சத்தில் அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட உள்ள நிலையில் அதற்காக சிறைச்சாலையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வசதிகள் குறித்த உத்தரவாத கடிதம் ஒன்றை சிறைச்சாலை நிர்வாகம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

நிரவ் மோடி அடைக்கப்படும் இதே அறையில் மற்றொரு குற்றவாளியான விஜய் மல்லையாவும் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது

#நிரவ் மோடி , சிறை ,மும்பை ,#விஜய் மல்லையா

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More