Home இந்தியா இந்தியாவில் உள்ள உலகிலேயே மிக உயரிய அஞ்சலகம் சுற்றுலா தலமாக மாறியுள்ளது

இந்தியாவில் உள்ள உலகிலேயே மிக உயரிய அஞ்சலகம் சுற்றுலா தலமாக மாறியுள்ளது

by admin


இந்தியாவில் உள்ள உலகிலேயே மிக உயரிய அஞ்சலகம் சுற்றுலா தலமாக மாற்றப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் ஹிக்கிம் கிராமம் அதிக மலைகளை கொண்ட, சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடமாகும். இப்பகுதியில் 14 ஆயிரத்து 567 அடி உயர மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ள அஞ்சலகம்தான் உலகிலேயே மிக உயரிய அஞ்சலகம் எனும் பெருமையைக் கொண்டுள்ளது.

1983ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த அஞ்சலகத்தை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.  ஆத்துடன் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பயணத்தின் நினைவாக அஞ்சலகத்தில் விற்கப்படும் முத்திரைகளை பயணிகள் வாங்கிச் செல்கின்றனர்.

இந்த அஞ்சலகம் மிகுந்த இயற்கை அழகுடன் மேலோங்கி காணப்படுகின்றது என அங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

#இந்தியா #உலகிலேயே #உயரிய #அஞ்சலகம் #சுற்றுலா தலமாக

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More