Home இலங்கை நாட்டினதும் ஐ.தே.கவினதும் தலைமைத்துவம் மாற வேண்டும்

நாட்டினதும் ஐ.தே.கவினதும் தலைமைத்துவம் மாற வேண்டும்

by admin


நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகும். அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலும்மாற்றும் கொண்டுவரப்படுவதும் அவசியம் என்று  டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

அத்துடன்  நாட்டில் இன்னும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே உள்ளதாகவும் அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய அளவான நிறைவேற்று அதிகாரங்களை அவரிடமே உள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் அஜித் பி.பெரேரா 19 ஆவது அரசியலமைப்பினூடாகவும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு உரையாற்றிய அமைச்சர், நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகும்ம் என்பதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலும் மாற்றம் கொண்டுவரப்படுவதும் அவசியம் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
#ஐ.தே.க  #தலைமைத்துவம் #அஜித் பி.பெரேரா
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More