Home இந்தியா பஞ்சாப் சிறையில் வன்முறை – ஒருவர் பலி – 35 பேர் காயம்

பஞ்சாப் சிறையில் வன்முறை – ஒருவர் பலி – 35 பேர் காயம்

by admin

பஞ்சாப் மாநிலம் லூதியானா மத்திய சிறையில் கைதிகளுக்குள் இடம்டபெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சிறையில் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த கைதி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனையடுத்து அவரை காவல்துறையினர் கொன்று விட்டதாக தெரிவித்த அவருக்கு சார்பான கைதிகள் எதிர்கோஷ்டியை சேர்ந்த கைதிகள் மீது கற்களை வீசி தாக்கினார்கள்.

இதனையடுத்து இருதரப்பும் கல்வீச்சில் ஈடுபட்ட நிலையில் வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இதனால் வன்முறை மேலும் தீவிரமாகியதில் ஒரு கைதி இறந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் சிறை அதிகாரிகள் உள்பட 35 பேர் காயம் அடைந்துள்ளதுடன் அதிகாரிகளின் வாகனம், சமையலறையின் ஒரு பகுதி ஆகியவற்றுக்கு தீவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #பஞ்சாப்  #சிறை  #வன்முறை

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More