Home இலங்கை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கான, மேச்சல் தரவைகள் தேவை

75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கான, மேச்சல் தரவைகள் தேவை

by admin


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 75ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளை அமைக்கவேண்டிய தேவையிருப்பதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் கௌரிதிலகன் தெரிவித்துள்ளார்.

விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பு மீன்பிடி என்பவற்றை பிரதானமான தொழிலாகக் கொண்டு மக்கள்வாழும் மாவட்டமாகக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தல் கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையல் பண்ணையாளர்கள் கால்நடைகளை பராமரிப்பதில் பெரும் கஸ்ரங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக, காலபோகச்செய்கையின் போது முழுமையான விவசாய நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில் கால்நடைகளை பராமரிப்பதில் பண்ணையாளர்கள் பெரும கஸ்ரங்களை எதிர்கொள்கின்றனர்.

கடந்த ஆண்டு பயிர்ச்செய்கையின் போது மேச்சல் தரவைகள் இன்றி குறுகிய நிலப்பரப்புக்களில் கல்நடைகளை பராமரித்தமையால் ஒரு வித நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகி அதிகளவான கால்நடைகள் அழிந்து போனதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை அதிகவான நிலப்பரப்பையும் வளப்பிரதேசங்களையும் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேச்சல் தரவை என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பில் கருத்துத்தெரிவித்த உதவிப்பணிப்பாளர் மாவட்டத்தில் உள்ளக வளர்ப்புமுறை மற்றும் திறந்தவெளி வளர்ப்பு முறைகளில் பண்ணையாளர்கள் கால்நடைகளை பராமரித்து வருகின்றனர். இருந்தபோதும் பாரம் பரிய முறையிலான திறந்த வெளி வளர்ப்பு முறையிலேயே அதிகளவான பண்ணையாளர்கள் கால்நடைகளை பராமரித்து வருகின்றனர். இவ்வாறு மாவட்டத்தில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் திறந்தவெளி முறையிலேயே வளர்க்கப்படுகின்றன. இவற்றுக்கான மேச்சல்தரவை என்பது மிகப்பாரிய பிரச்சனையாகவுள்ளது. இது தொடர்பில் தாங்களும் கோரிக்கைகளை முன்வைத்து வருகிவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  #முல்லைத்தீவு #சுகாதாரதிணைக்களம் #கால்நடைவளர்ப்பு #மீன்பிடி #மேச்சல் தரவைகள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More