Home இலங்கை அரச கரும மொழிகள் வாரம் இன்று ஆரம்பம்

அரச கரும மொழிகள் வாரம் இன்று ஆரம்பம்

by admin

அரச கரும மொழிகள் வாரம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதுவரை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாத அரச கரும மொழிக் கொள்கையை செயற்படுத்துவதற்காக, அரச கரும மொழிகள் வாரம் அறிவிக்கபட்டுள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்றிலிருந்து 5ஆம் திகதி வரை பல நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று முதலாவது நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.  அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன இந்த நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இரு மொழிகளைக் கற்போம் – நாட்டைக் காப்போம் என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இரண்டாம் நாள் நிகழ்வு கொழும்பு இசிப்பதான கல்லூரில் பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது #அரச கரும மொழிகள் வாரம்  #இன்று #ஆரம்பம் #மனோ கணேசன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More