Home உலகம் ஆபத்தான விளையாட்டில் தலையிட வேண்டாம் – பிரித்தானியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஆபத்தான விளையாட்டில் தலையிட வேண்டாம் – பிரித்தானியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

by admin


ஈரானுடனான உறவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியா தனது இரண்டாவது போர்க்கப்பலை வளைகுடாவுக்கு அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தற்போது, மத்திய தரைக்கடல் பகுதியில் நிற்கும் எச்.எம்.எஸ் டன்கன் என்ற போர்க்கப்பல் அடுத்த வாரம் எச்.எம்.எஸ் மென்ட்ரோஸ் என்ற போர்க்கப்பலுடன் பாதுகாப்பு பணியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த புதன்கிழமை பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரித்தானியாவின் போர்க்கப்பலான எச்.எம்.எஸ் மெண்ட்ரோஸ் , மூன்று ஈரானிய படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்தே, அந்தப் பகுதிக்கு இரண்டாவது போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.

அதேவேளை கடந்த வாரம் ஜிப்ரால்டர் கடற்பகுதியில் ஈரானுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றை பிரித்தானிய கடற்படையினர் பிடித்திருந்த நிலையில் அக்கப்பலை விடுவிக்குமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ள ஈரான் இந்த ஆபத்தான விளையாட்டில் பிரித்தானியா தலையிட வேண்டாம் என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #ஆபத்தான  #பிரித்தானியா #ஈரா #எச்சரிக்கை #போர்க்கப்பலை #வளைகுடா

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More