Home இலங்கை அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

by admin


மகசின் சிறைச்சாலையில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டு வந்த அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அமைச்சர் மனோ கணேசன், நேரில் சென்று சந்தித்து இன்னும் இரு வாரங்களில் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்வதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து, அவர் நீராகாரம் அருந்தி உண்ணாவிரதத்தை நிறைவு செய்து கொண்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதியான கணகசபை தேவதாசன் நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தனக்கு பிணை வழங்குமாறு கோரி கடந்த சில தினங்களாக புதிய மகசின் சிறைச்சாலைக்குள் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #அரசியல் கைதி  #தேவதாசனின்#உண்ணாவிரதப் போராட்டம் #நிறைவு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More