Home இலங்கைகோத்தாபய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதி…

கோத்தாபய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதி…

by admin


பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச நிறுத்தப்படுவது உறுதியாகி உள்ளது என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 11 ம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைமைப்பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வார் எனவும் அதன் பின்னர் அவர் அனேகமாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார் எனவும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கோத்தாபய ராஜபக்ச கடந்த புதன் கிழமை சிங்கப்பூரிலிருந்து மருத்துவசிகிச்சையின் பின்னர் நாடு திரும்பினார். அவரை வரவேற்பதற்கான நிகழ்வுகள் எதுவும் இடம்பெறாமலிருப்பதை உறுதி செய்ய மகிந்த ராஜபக்ச விரும்பினார். ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கோத்தபாய ராஜபக்சவை களனி விகாரைக்கு பேரணியாக அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் கோத்தாபய ராஜபக்சவை அனுராதபுரம் மகாபோதி விகாரைக்கு வாகனப்பேரணியாக அழைத்து செல்வதற்கான திட்டங்களும் காணப்படுகின்றன,அதன் பின்னர் அவர் கண்டிக்கும் செல்வார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More