Home இலங்கை வசந்த கரன்னாகொடவும், ரொஷான் குணதிலகவும் தரம் உயர்த்தப்பட்டனர்

வசந்த கரன்னாகொடவும், ரொஷான் குணதிலகவும் தரம் உயர்த்தப்பட்டனர்

by admin

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட , முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக ஆகியோர் தமது பதவி நிலைகளில் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (06.08.19) வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை கடற்படைத் தளபதியாக பணியாற்றிய வசந்த கரன்னாகொட, கடற்படையின் அட்மிரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதேவேளை, 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை விமானப்படைத் தளபதியாக பணியாற்றிய ரொஷான் குணதிலக, விமானப்படை சீப் மார்ஷலாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.  #வசந்த கரன்னாகொட #ரொஷான் குணதிலக  #விமானப்படை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More