Home இலங்கை தென்மராட்சி எழுதுமட்டுவாளில் வயோதிபர்களை தாக்கி, பெருமளவு பணம் நகை கொள்ளை…

தென்மராட்சி எழுதுமட்டுவாளில் வயோதிபர்களை தாக்கி, பெருமளவு பணம் நகை கொள்ளை…

by admin

மயூரப்பிரியன்….

தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் வீடொன்றுக்குள் முகங்களை மறைத்தவாறு நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்தவர்களைத் தாக்கிவிட்டு கனடாவில் இருந்து சென்ற பெண் ஒருவரின் 35 பவுண் நகைகள், 10 இலட்சம் ரூபா பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரினால் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து சென்ற பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு எழதுமட்டுவாளில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார் அன்றிரவு இரவு முகங்களை துணியால் மறைத்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முதியவர்களை கடுமையாக தாக்கிவிட்டு நகை, பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரில் உள்ள ஆலயம் ஒன்றின் கட்டுமானப்பணி வேலைகளுக்காக கனடா நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட 10 இலட்சம் ரூபா பணத்தை நேற்று முன்தினம் வவுனியா சென்று பெற்றுள்ளார். இதனை அறிந்தவர்களே இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More