Home இலங்கை 2ஆம் இணைப்பு – இளைஞர்கள் விடுவிப்பு…

2ஆம் இணைப்பு – இளைஞர்கள் விடுவிப்பு…

by admin

மயூரப்பிரியன்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று  இளைஞர்கள் காவற்துறையினரால்   கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகிற நிலையில் , நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் நல்லூர் ஆலய வீதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று  இளைஞர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

“கிளிநொச்சி மற்றும் முழங்காவில் பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் மூவர் நேற்றிரவு 10 மணியளவில் ஆலய வீதியில் நடமாடியதனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்” என்று யாழ்ப்பாணம் தலைமையகப்  காவல்  நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் கைது…

Aug 13, 2019 @ 05:26


யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாண காவற்துறையினரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டபின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இரவு 10 மணி அளவில் ஆலய வளாகத்துக்குள் நடமாடியதனால் சந்தேகத்தின் பேரில் குறித்த மூன்று  இளைஞர்களையும் கைது செய்ததாக யாழ்ப்பாண காவற்துறைப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்  மேலும் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களும் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்ப்பாண காவற்துறைப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More