Home இலங்கை காங்கேசன்துறை தேர்தல் தொகுதி குறித்து அரசாங்கத்தின் தீர்மானத்தை தொடருமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோர முடியும்

காங்கேசன்துறை தேர்தல் தொகுதி குறித்து அரசாங்கத்தின் தீர்மானத்தை தொடருமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோர முடியும்

by admin

யாழ்ப்­பா­ணம், காங்­கே­சன்­து­றைத் தேர்­தல் தொகு­தி­யில், குறிப்­பிட்ட தொகை வாக்­கா­ளர்­க­ளின் பெயர்ப்­பட்­டி­யல்­களை நீக்­கா­த­வாறு ஏற்­க­னவே உள்ள அரச தீர்­மா­னத்­தைத் தொட­ரு­மாறு தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­டம் வேண்­டு­கோள் முன்­வைக்க முடி­யும் என பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் அபி­வி­ருத்தி தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதில், காங்­கே­சன்­து­றைத் தேர்­தல் தொகு­தி­யின் 21 கிராம அலு­வ­லர் பிரிவு நிலம் இது­வரை விடு­விக்­கப்­ப­டாத விட­யத்தை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் எடுத்­துக்­கூ­றி­னார்.

யாழ்ப்­பா­ணத் தேர்­தல் மாவட்­டத்­தின் காங்­கே­சன்­து­றைத் தேர்­தல் தொகு­தி­யில் 14 கிராம அலு­வ­லர்­கள் பிரி­வு­கள் முழு­மை­யா­க­வும் 7 கிராம அலு­வ­லர் பிரி­வு­கள் பகு­தி­ய­ள­வி­லு­மாக மொத்­தம் 21 கிராம அலு­வ­லர் பிரி­வு­கள் கொண்ட நிலம் இது­வரை விடு­விக்­கப்­ப­ட­வில்லை. விடு­விக்­கப்­பட்ட பகு­தி­க­ளில் எந்­தத் தேவை­யும் பூர்த்தி செய்­யப்­ப­டா­ம­லுள்­ளன.

அவ்­வா­றி­ருக்­கை­யில் அந்­தப் பகுதி மக்­கள் சொந்த இடம் திரும்­பு­வ­தற்­குத் தயங்­கு­கின்­ற­னர். இந்த நிலை­யில் தற்­போ­துள்ள வாக்­கா­ளர் பெயர்ப் பட்­டி­ய­லி­லி­ருந்து அத்­த­கை­ய­வர்­க­ளின் பெயர்­களை நீக்க முற்­ப­டு­வது அந்­தப் பகுதி மக்­க­ளின் அடை­யா­ளத்தை பாதிக்­கும் செய­லாக அமை­யும்.

அந்­தப் பகு­தி­யில் மீள்­கு­டி­யேற்­றம் நிறை­வு­பெ­றும் வரை­யில் காங்­கே­சன்­து­றைத் தேர்­தல் தொகு­தி­யின் வாக்­கா­ளர் பட்­டி­ய­லி­லி­ருந்து மக்­க­ளின் பெயர்­களை நீக்­கக் கூடாது – என்று சுமந்­தி­ரன் கோரிக்கை முன்­வைத்­தார்.

இதற்­குப் பதி­ல­ளித்து உரை­யாற்­றிய பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, காங்­கே­சன்­து­றைத் தேர்­தல் தொகுதி தொடர்­பில் ஏற்­க­னவே உள்ள அரச தீர்­மா­னத்தை தொட­ரு­மாறு தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­டம் வேண்­டு­கோளை முன் வைக்க முடி­யும். இத­னால் குறித்த விட­யத்தை உட­ன­டி­யா­கத் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் கவ­னத்­துக்­குக் கொண்டு செல்­லுங்­கள். அதற்கு எமது ஒத்­து­ழைப்­புக் கிட்­டும் – என்று தெரி­வித்­தார்.

அந்­தத் தொகு­தி­யி­லுள்ள பெயர்ப்­பட்­டி­ய­லி­லி­ருந்து அங்கு குடி­யி­ருக்­கா­த­வர்­க­ளின் பெயர்­களை நீக்­கு­வ­தாக இருந்­தால் நாடா­ளு­மன்­றுக்­குத் தெரிவு செய்­யப்­ப­டும் தமிழ் உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­றது.  #யாழ்ப்­பா­ணம் #காங்­கே­சன்­து­றை #தேர்­தல் #ரணில்

-மயூரப்பிரியன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More