Home இலங்கை தமிழ் குடும்பத்தை நாடு கடத்தும் நீதிமன்ற தீர்ப்பு, ஒத்திவைக்கப்பட்டது…

தமிழ் குடும்பத்தை நாடு கடத்தும் நீதிமன்ற தீர்ப்பு, ஒத்திவைக்கப்பட்டது…

by admin


அவுஸ்திரேலிய தமிழ் குடும்பத்தை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்க அந்நாட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, அவர்களுக்கு அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவின் அகதிகள் முகாமில் தொடர்ந்தும் தங்கியிருக்க நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏதிலிகளாக அந்நாட்டில் தங்கியிருக்கும் இலங்கை தமிழ் தம்பதியினர் மற்றும் அவர்களின் குழந்தைகள் இருவரையும் அந்நாட்டில் இருந்து நாடு கடத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், அவர்களை நாடு கடத்தும் தீர்மானம், அந்நாட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சென்ற விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

ஏதிலிகளாக அந்நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து வரும் குறித்த தமிழ் குடும்பத்தை நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்திற்கு எதிராக கடந்த தினங்களில் அந்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் சில இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More