78
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழு ஆகியவற்றின் கருத்துக்கள் மூலம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக நீதியில் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று (17) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதில் தனக்கு பூரண நம்பிக்கையுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love