எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோர் இன்று (28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படக்கூடும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் தொடர்பில் விசேடமாக கவனம் செலுத்தப்படக் கூடும் எனவும வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். #கோத்தாபய #மகிந்த #பசில் #மைத்திரி #சந்திப்பு
Spread the love
Add Comment