Home இலங்கை புதுக்குடியிருப்பில் வெடிபொருட்கள் மீட்பு…

புதுக்குடியிருப்பில் வெடிபொருட்கள் மீட்பு…

by admin

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவற்துறைப் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று (29.09.19) சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் நிலத்தினை உழவு செய்யும் போது கடந்த கால போரின் போது புதைக்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு காவற்துறையினருக்கு வீட்டின் உரிமையாளரினால் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு காவற்துறையினர் குறித்த இடத்தில் அடையாளம் காணப்பட்ட 8 கிளைமோர் குண்டுகளையும் 60 ரிக்னெட்டர்களையும் இனம் கண்டு அடையாளப்படுத்தியுள்ளார்கள். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அதனை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More