Home உலகம் ஈரானில் கடுமையான நிலநடுக்கம் – 5 பேர் பலி

ஈரானில் கடுமையான நிலநடுக்கம் – 5 பேர் பலி

by admin

ஈரானில் இன்று அதிகாலை ரிக்டர் அளவில் 5.9 அளவில் ஏற்பட்ட கடு:மையான நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள அசெர்பைஜான் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திதனால் அப்பகுதியில் இருந்த வீடுகள் கட்டிடங்கள் குலுங்கியதுடன் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 120 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கடந்த 2003ம் ஆண்டு ஈரான் நாட்டின் பாம் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 26,000 மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ஈரான் #நிலநடுக்கம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More