Home இலங்கை பொதுபல சேனா கலைக்கப்படும்

பொதுபல சேனா கலைக்கப்படும்

by admin


பொதுத் தேர்தல் நடந்து முடிந்ததும், பொதுபல சேனா அமைப்பு கலைக்கப்படுமென, அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இன்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினரின் வாக்குகளின்றி, இந்த நாட்டில் அரசாங்கமொன்றை உருவாக்க முடியாதென்ற கருத்து நிலவியிருந்ததாகவும் ஆனால் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், அந்தக் கருத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளதாகவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டுக்கு தற்போது, சிறந்த தலைமைத்துவமொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் பொதுத் தேர்தலின் பின்னர், நல்லதோர் அமைச்சரவையுடன், நல்ல பயணமொன்றை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், பொதுபல சேனா அமைப்பின் தேவை, இனி தேவைப்படாது எனும் பட்சத்தில், பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, தமது அமைப்பைக் கலைத்துவிடத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  #பொதுபலசேனா  #தேர்தல் #ஞானசார தேரர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More