Home இந்தியா இலங்கை ஜனாதிபதியின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – வைகோ கைது

இலங்கை ஜனாதிபதியின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – வைகோ கைது

by admin


இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ 2 நாட்கள் பயணம் மேற்கொண்டு இன்று (28) இந்தியா செல்கின்ற நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கை ஜனாதிபதியின் இந்திய பயணத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றநிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் வைகோ தலைமையில் மதிமுகவினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆங்னு உரையாற்றிய வைகோ, இலங்கை ஜனாதிபதியை இந்தியா நம்பக் கூடாது எனவும் அவர் எப்போதும் சீனாவின் நண்பர்; என்பதனால் இந்தியாவுக்கு நண்பராக இருக்கவே மாட்டார் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார் இதனையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது   #இலங்கை  #ஜனாதிபதி #ஆர்ப்பாட்டம்  #வைகோ #கைது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More