Home இலங்கை மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற நாவலர் விழா :

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற நாவலர் விழா :

by admin

மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் இணையத்தின் ஏற்பாட்டில் ‘நாவலர் விழா’ இன்று(29) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் இணையத்தின் தலைவர் மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக முது நிலை விரிவுரையாளர் கலாநிதி விக்னேஸ்வரி பவனேசன்,மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பாடசாலை முன்றலில் இருந்த நாவலர் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டு நிகழ்வகள் இடம் பெற்றது. இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு,துறைசார் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அறநெறி பாடசாலை மாணவர்கள்,களைஞர்கள்,எழுத்தாளர்கள் ,திணைக்கள பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது  #மன்னார் #நாவலர்விழா #அறநெறிப்பாடசாலை

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More