Home இந்தியா இலங்கையின் முகமது ரிபாஸிற்கு 2022 வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது….

இலங்கையின் முகமது ரிபாஸிற்கு 2022 வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது….

by admin

இலங்கையைச் சேர்ந்தவர் 36 வயதுடைய முகமது ரிபாஸ் 2004 ஆம் ஆண்டு கொழும்புவில் இருந்து வேலை நிமித்தமாக டுபாய் சென்று அங்கிருந்து 2009 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் சென்னை சென்று  புடவைக்  ஒன்றில்  தொழில் புரிந்த நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த ரோஷன் சல்மா என்பவரை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 4 குழந்தைகள் உள்ளன.

கீழக்கரையில் குடும்பத்துடன் வசித்து வந்த முகமது ரிபாஸை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போதைவஸ்து கடத்தியதாக இவர் உள்ளிட்ட 4 பேரை கியூ பிரிவு காவற்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்களுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2019 ஏப்ரலில் இவர் தனது நண்பர்களுடன் இணைந்து வட்ஸ் அப் குரூப் தொடங்கி இஸ்லாத்திற்கு ஆதரவாகவும், இஸ்லாம் அல்லாதோருக்கு எதிராகவும் பிரசாரம் செய்வதுடன், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை கொலை செய்யவும் திட்டம் தீட்டி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் குற்றங்கள் புரிந்த முகமது ரிபாஸ், வெளிநாடுகளில் வேலை நிமித்தமாத ஆட்களை சட்ட விரோதமாக அனுப்பி வந்தார். இதனை அடுத்து இவரிடமிருந்து அமைதி மற்றும் நன்னடத்தை உறுதிமொழி ஆவணம் பெறப்பட்டது.

உறுதிமொழி ஆவணத்தை மறைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு மூலம், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு சலுகைகளைப் பெற்றார்.

இது குறித்து காஞ்சிரங்குடி வி.ஏ.ஓ., கீழக்கரை காவற்துறையில் முறையிட்டார். அதன்படி, நன்னடத்தை பிணைய காலமான 2022 நவம்பர் 19 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க கீழக்கரை தாசில்தார் வீரராஜ் உத்தரவிட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More