Home இலங்கை மன்னாரில் தமிழுக்கு வழங்கப்பட்ட முதலிடத்தை விமல் வீரவன்ச மாற்றி அமைத்தார்…

மன்னாரில் தமிழுக்கு வழங்கப்பட்ட முதலிடத்தை விமல் வீரவன்ச மாற்றி அமைத்தார்…

by admin

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் ‘பனந்தும்பு உற்பத்தி நிலையம்’ திறந்து வைக்கப்பட்ட நிலையில்,தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டதை அவதானித்த அமைச்சர் விமல் வீர வன்ச குறித்த பெயர் பலகையை இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை மாற்றியமைத்துள்ளார்.

குறித்த சம்பவம் தோடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னாரிற்கு கடந்த சனிக்கிழமை (18.01.20) விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த அமைச்சர் விமல் வீர வன்ச இரண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.

அன்றைய தினம் காலை 10 மணியளவில் மன்னார் பெரிய கடை பகுதியில் அமைந்துள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு (மாந்தை சோல்ட் லிமிற்றெற்)சென்றிருந்தார். அங்கு சென்ற அமைச்சர் உப்பு உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டதோடு,அங்குள்ள பிரச்சினைகள் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் ‘பனந்தும்பு உற்பத்தி நிலையத்தை அமைச்சர் விமல் வீரவன்ச வைபவ ரீதியாக திறந்து வத்தார்.

வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பெயர்ப் பலகையில் தமிழில் முதலிலும் இரண்டாவது சிங்களத்திலும் மூன்றாவது ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெயர்ப்பலகையில் தமிழுக்கு கொடுக்கப்பட்டிருந்த முன்னுரிமையை அவதானித்த அமைச்சர் விமல் வீர வன்ச ஆவேசத்துடன் திறக்கப்பட்ட அந்த பெயர் பலகையை கழற்றி விட்டு உடனடியாக சிங்களத்தில் முதலாவதும் தமிழில் அடுத்ததாகவும் வரும் வகையில் மாற்றும் படி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதற்கமைவாக உரிய அதிகாரிகள் அமைதியான முறையில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை(20) மாலை குறித்த பெயர்ப்பலகை மாற்றப்பட்ட உரிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றப்பட்டதை மகிழ்ச்சியுடன் அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாற்றப்பட்ட புகைப்படத்தையும் ஆதாரத்துக்கு வெளியிட்டிருக்கிறார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More