Home இலங்கை குடும்பமாக தற்கொலை முயற்சி…

குடும்பமாக தற்கொலை முயற்சி…

by admin

ஒரே குடும்பத்தில் தாய், அவரது மகள், மகளின் கணவர் என மூவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முற்பட்டுள்ளனர். அவர்களில் தாயார் உயிரிழந்த நிலையில் அவரது மகளும் மருமகனும் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தென்மராட்சி, மட்டுவில் சந்திரபுரம் வடக்கு செல்லப்பிள்ளையார் கோவிலடியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றது என்று சாவகச்சேரி காவற்துறையினர் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த நவரத்தினம் விமலேஸ்வரி (வயது-65) என்ற தாயார் உயிரிழந்துள்ளார். அவரது மகள் சிவலக்சன் கீர்த்திகா (வயது-35), மருமகன் சிவபாலன் சிவலக்சன் (வயது-35) ஆகியோர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிக வட்டிக்கு வாங்கிய கடனால் ஏற்பபட்ட நெருக்கடி நிலை காரணமாகவே இந்த உயிர்மாய்ப்பு முயற்சி இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவருகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More