Home இலங்கை தாவடியில் தொற்று நீக்கி விசிறும்  நடவடிக்கை

தாவடியில் தொற்று நீக்கி விசிறும்  நடவடிக்கை

by admin
யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் தாவடிக் கிராமத்தில் தொற்றுக் கிருமி நீக்கி விசிறும்  நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. சிறப்பு அதிரடிப் படையினர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர்.
கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட புதிய இயந்திரத் தொகுதியால் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை, கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் வீடு உள்ள தாவடிக் கிராமத்தில் வசிப்போர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், காவல்துறையினர்  கண்காணித்து வருகின்றனர்.  #தாவடி  #தொற்றுநீக்கி #கொரோனா
 
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More