Home இந்தியா இந்தியா முழுவதும் மே 31 வரை பொதுமுடக்கம் நீடிப்பு :

இந்தியா முழுவதும் மே 31 வரை பொதுமுடக்கம் நீடிப்பு :

by admin

இந்தியா முழுவதும் மே 31ம் திகதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,927 ஆக உயர்ந்தள்ளது.

இந்தநிலையில் nஇன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் நாடு முழுவதும் மே 31 ம்திகதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணியுடன் 3 ஆம் கட்ட பொதுமுடக்கம் முடியும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசு ஏற்கனவே மே 31ம்திகதி வரை பொமுடக்கத்தை நீடித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #இந்தியா  #பொதுமுடக்கம்  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More