Home இலங்கை பாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

பாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

by admin


யாழ்ப்பாணம் பாசையூர் கடலிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பாசையூர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான சில்வெஸ்ரர் சஜித் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் நான்கு கடற்றொழிலாளர்கள் பூம்புகார் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது குறித்த நபர் காணாமல் போயிருந்தார்.

இவரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, மற்றொரு இடத்திற்கு தொழில் பார்க்கச்சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்த போது, அவர் காணாமல் போயிருந்தார்.  இதனையடுத்து மீனவர்கள் சேர்ந்து அவரைத் தேடிய நிலையில் பூம்புகார் கடற்பகுதியில் சடலமாக கரையொதுங்கிய நிலையில், மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதனை தொடர்ந்து , யாழ்ப்பாணம் காவல்துறையினர் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் ஆகியோர் சடலத்தை பார்வையிட்டுள்ளனர். அதன்பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. #யாழ்ப்பாணம் #பாசையூர் #சடலம் #மீட்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More