Home இந்தியா தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு

by admin


தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுகிறது. கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக காணப்பட்டு வருகின்ற நிலையில் அங்கு நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், கடந்த ஜூன் 19-ந் திகதி முதல் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை, மருந்து கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 31-ந் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் 21 மற்றும் 28-ந் திகதிஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கூறப்பட்ட 4 மாவட்டங்களிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. பின்னர், ஜூலை மாதமும் 1-ந் திகதி முதல் 5-ந் திகதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், 6-வது கட்டமாக கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் ஜூலை 1-ந் திகதி முதல் 31-ந் திகதி வரை அறிவிக்கப்பட்டது.  எனினும் இந்த காலகட்டத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூலை 5-ந் திகதிதமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுகிறது. #தமிழகம்  #ஊரடங்கு #கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More