Home இலங்கை நல்லூர் ஆலயத்துக்கு வருபவர்கள் அடையாள அட்டை காண்பித்தே செல்லமுடியும்.

நல்லூர் ஆலயத்துக்கு வருபவர்கள் அடையாள அட்டை காண்பித்தே செல்லமுடியும்.

by admin

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நாளை (25) ஆரம்பமாகும் நிலையில் வழிபடுவதற்கு வருகை தரும் அடியவர்கள் அடையாள அட்டை கொண்டு வருவது அவசியம் என்று யாழ்ப்பாணம் தலைமையகப் காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்.

“திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. நாளை ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவரும் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புச் சோதனை சாவடியில் அடையாள அட்டையினை காண்பித்தே ஆலயத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அத்தோடு வெளிநாட்டிலிருந்து வருபவராக இருந்தால் அவர் தனிமைப்படுத்தலுக்குட்பட்டவர் என்ற சான்றிதழை காண்பித்த பின்னரே ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்.

அத்தோடு அடியவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருகை தர வேண்டும். அத்தோடு சுகாதார நடைமுறையினை பின்பற்றும் முகமாக கைகளை நன்றாகக் கழுவி உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அடையாள அட்டையினை காண்பித்து, அவர்களது முகம் கமராவில் பதிவு செய்யப்பட்ட பின்னரே ஆலயத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்” என்றும் காவல்துறைபொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இம்முறை நல்லூர் உற்சவமானது மிகவும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இடம்பெறவுள்ள நிலையில் மக்கள் பெருமளவில் ஆலயத்திற்கு வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். #நல்லூர்  #அடையாளஅட்டை  #திருவிழா #கமரா #முகக்கவசம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More