Home இலங்கை நாடாளுமன்றுக்கு தெரிவான புதியவர்கள், 15ஆம் திகதிக்கு முன் பதிவுசெய்ய வேண்டும்..

நாடாளுமன்றுக்கு தெரிவான புதியவர்கள், 15ஆம் திகதிக்கு முன் பதிவுசெய்ய வேண்டும்..

by admin

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. இந்த பதிவு நடவடிக்கைகள் Online மூலமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தராது, தமது பெயரை பதிவு செய்து கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார். தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் கல்வித் தகைமை, தொழில் தகைமை, நிழற்படம் மற்றும் சமயம் ஆகியன தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன.

www.parliament.lk  எனும் இணையத்தள முகவரியினூடாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More