Home இலங்கை போலி நாணய தாளுடன் பெண் கைது

போலி நாணய தாளுடன் பெண் கைது

by admin

போலி நாணயத்தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் அச்சுவேலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி இலங்கை வங்கிக் கிளையில் நேற்று ஆயிரம் ரூபாய் பெறுமதியிடப்பட்ட 3 போலி நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த பெண்ணே கைது செய்யப்பட்டு அச்சுவேலி காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

அந்த போலி நாணயத்தாள்கள் அவருக்கு எவ்வாறு கிடைத்தன என்பன தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனால் மேலதிக விவரங்களை வழங்க முடியாது என்று அச்சுவேலி காவல்துறையினா் தெரிவித்தனர். #போலிநாணயத்தாள்கள் #அச்சுவேலி   #இலங்கைவங்கி  #கைது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More