Home இலங்கை ஊருக்குள் நுழைய முயன்ற யானைக் கூட்டம் விரட்டியடிப்பு

ஊருக்குள் நுழைய முயன்ற யானைக் கூட்டம் விரட்டியடிப்பு

by admin

யானைக் கூட்டம் ஒன்று ஊருக்குள் பிரவேசிக்க முற்பட்டதை அடுத்து  வனவிலங்கு அதிகாரிகள் அக்கூட்டத்தை விரட்ட நடவடிக்கை  எடுத்தனர்.

 திடீரென அம்பாறை மாவட்டம் வீரச்சோலை காட்டின் ஊடாக கிட்டங்கி ,சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை  ,எல்லை கடந்து  ஊருக்குள் பிரவேசித்த சுமார் 40 க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக    துரித  நடவடிக்கைகளை வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டனர்.

வெள்ளிக்கிழமை(14) மாலை  இன்று(15) காலை  இச்சம்பவம் இடம்பெற்றதுடன் விரட்டி செல்லப்பட்ட யானைகள் மீண்டும் காடுகளுக்குள் சென்றுள்ளன.

அண்மைக்காலமாக இப்பகுதியில் வேளாண்மை அறுவடை நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான யானைகள் இப்பகுதியில் வருகை தந்த வண்ணம் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. #யானைக்கூட்டம் #ஊருக்குள் #நற்பிட்டிமுனை  #வனவிலங்குஅதிகாரிகள்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More