Home இலங்கை மன்னார் மடு அன்னையின் ஆவணி திருவிழா

மன்னார் மடு அன்னையின் ஆவணி திருவிழா

by admin

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை(15)  காலை சிறப்பாக இடம் பெற்றது.இன்று சனிக்கிழமை காலை 6.15 மணியளவில் கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்னாண்டோ தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரம சிங்க, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.


இந்த நிலையில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் அன்னையின் ஆசீர்வாதத்தை வேண்டி  மடுத்திருத்தலத்திற்கு வருகை தந்தனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச் சொரூப பவணி இடம் பெற்ற தோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்,அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரதி நிதிகள், திணைக்கள தலைவர்கள் உற்பட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையிடம் ஆசி பெற்றமை குறிப்பிடத்தக்கது. #மன்னார் #மடுஅன்னை #ஆவணிதிருவிழா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More