Home இலங்கை நல்லூர் பிரதேச சபைச் செயலாளர் மீது தாக்குதல்

நல்லூர் பிரதேச சபைச் செயலாளர் மீது தாக்குதல்

by admin

நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.

நல்லூர் அரசடியைச் சேர்ந்த ஒருவர், திருநெல்வேலி சந்தை தொகுதியில் உள்ள உறவினரின் கடை தொடர்பில் பிரதேச சபைச் செயலாளரால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகத் தெரிவித்து முரண்பட்டுள்ளார். முரண்பாடு முற்றிய நிலையில் பிரதேச சபைச் செயலாளரை அந்த நபர் தாக்கியுள்ளார்.

தாக்கிவிட்டுத் தப்பிச் செல்ல முற்பட்ட அவரை தடுத்துவைத்த பிரதேச சபை ஊழியர்கள் கோப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தாக்குதலாளியை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  #நல்லூர் #பிரதேசசபை #தாக்குதல் #சுதர்சன்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More