Home உலகம் கொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம்

கொரோனா மரணங்களை விட முடக்கத்தினால் மரணங்கள் அதிகம்

by admin

கொரோனாவினால் ஏற்படும் பாதிப்புகள் ஒரு பக்கம் அதிகாித்து வரும் நிலையில் மறுபக்கம் வெளியே தெரியாத மற்றொரு பிரச்சினை அமைதியாக மக்களைக் கொன்று கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பிாித்தானியாவில் கொரோனா பரவலின் 2-வது அலையை தொடர்ந்து அங்கு கட்டு்ப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டால், கொரோனா அல்லாத வேறு பிரச்சினைகளால் சுமார் 75,000 பேர் உயிரிழக்கலாம் என 188 பக்க ரகசிய ஆவணம் ஒன்று தெரிவித்துள்ளது

பிாித்தானியஅரசின் அவசர கால அறிவியல் ஆலோசனைக் குழுவிடம் (Sage) ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வு, கொரோனா தொடர்பில் மேலும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கவிடாமல் பிரதமர் பொரிஸ் ஜோன்சனை அதிக அழுத்தத்திற்குள்ளாக்கியுள்ளது.

மார்ச் ,ஏப்ரல் மாதங்களில் மட்டுமே மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக 16,000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த ஆவணம் சுட்டிக்காட்டியுள்ளது

அத்துடன், மக்கள் தொடர்ந்து விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படாவிட்டால், இன்னும் ஓராண்டுக்குள் 26,000 பேர் உயிரிழப்பார்கள் என்ற செய்தியையும் அந்த ஆவணம் தெரிவித்துள்ளது.

மேலும், புற்றுநோய், ரத்து செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் மற்றும் பண மதிப்பு வீழ்ச்சி காரணமாக இன்னும் 31,900 பேர் உயிரிழக்கலாம் எனவும் அந்த ஆவணம் தொிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, பிாித்தானியாவில் கொரோனாவுடன் நேரடி தொடர்புடைய மரணங்களின் எண்ணிக்கை 41,936 என்பது குறிப்பிடத்தக்கது. #கொரோனா #மரணங்கள் #முடக்கம் #corona #பிாித்தானியா #lockdown

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More