Home இலங்கை “சஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டேன் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தனர்”

“சஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டேன் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தனர்”

by admin


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யுமாறு தான் உத்தரவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த அவர், உரிய அதிகாரிகள் தங்கள் பணிகள் குறித்து அலட்சியமாகயிருந்தமையே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.


தனது நிர்வாகத்தின் போது முப்படைதளபதிகள் உட்பட உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசனைகளை மேற்கொண்டு நாட்டிற்கான பாதுகாப்பு கொள்கையை உருவாக்கியதாக குறிப்பிட்ட அவர், 19வது திருத்தத்தின் மூலம் தேசிய நல்லிணக்க அமைச்சு என தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்பினை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்ததன் மூலம் அதனை தன்னால் உறுதி செய்ய முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

எத னது பதவிக்காலத்தின் முதல் ஆறுமாதங்கள் மாத்திரமே பிரதமரும் அமைச்சரவையும் எனக்கு ஆதரவளித்தன எனவும் சுட்டிக்காட்டிய அவர், பிரதமரினதும் அமைச்சரவையினதும் முழுமையான ஆதரவு கிடைக்காமை காரணமாக பல பின்னடைவுகள் ஏற்பட்டன எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சட்சியம் அளித்துள்ளார்.

அரசசார்பற்ற அமைப்புகளின் தேவையற்ற தலையீடுகள் நாட்டில் பிரச்சினையை உருவாக்கி இனமுறுகலுக்கு வழிவகுத்தன எனவும் கூறியுள்ள அவர், ஏப்பிரல் 16ம் திகதி தன்னுடன் விமானநிலையத்துக்கு பயனித்த காவற்துறைமா மா அதிபர் தாக்குதலொன்று இடம்பெறலாம் தன எனக்கு தெரிவிக்கவில்லை எனவும், அவ்வாறே ஏப்பிரல் 14ம் திகதி புதுவருட கொண்டாட்டங்களுக்காக எதனது வீட்டிற்கு வந்தவேளை அவரோ பாதுகாப்பு தளபதியோ இது குறித்து தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்ற சம்பவத்தினால் தான் அதிர்ச்சியடைந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More