Home இலங்கை யாழ் பல்கலைக்கழக மாணவா்கள் 21 பேருக்கு வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை

யாழ் பல்கலைக்கழக மாணவா்கள் 21 பேருக்கு வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை

by admin

கடந்த 8 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கலைப்பீடச் சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேருக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையினால் , பல்கலைக்கழகத்துக்கும், துணைவேந்தருக்கும் அபகீர்த்தி ஏற்படுத்திய மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் பல்கலைக் கழகத்தினுள் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது எனவும் நேற்றையதினம் கலைப்பீடச் சபை ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததுடன், மாணவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளைப் புறக்கணிப்பது எனவும் தீா்மானிப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கலைப்பீடச் சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேருக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான தடையுத்தரவுக் கடிதம் நேற்றிரவு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய காணொலி ஆதாரங்கள் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட மேலும் 12 மாணவர்களுக்கு இன்று தடையுத்தரவு பிறப்பிக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது #யாழ்பல்கலைக்கழக #மாணவா்கள் #நுழைவதற்கு #தடை #துணைவேந்தர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More