Home சினிமா எஸ்.பி.பி நினைவாக மோட்ச தீபம் ஏற்றிய பின்னணிப் பாடகர்கள்

எஸ்.பி.பி நினைவாக மோட்ச தீபம் ஏற்றிய பின்னணிப் பாடகர்கள்

by admin

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பின்னணிப் பாடகர்கள் மோட்ச தீபம் ஏற்றி பக்திப்பாடல்கள் பாடியுள்ளனர்

கடந்த சில தினங்களுக்கு முன் உயிாிழந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்ற பின்னணி பாடகர்கள் அவரது நினைவாக மோட்ச தீபம் ஏற்றியுள்ளனர்.


நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியின் சகோதரியும், பின்னணி பாடகியுமான எஸ்.பி.சைலஜா, அவரது கணவர் சுபலேகா சுதாகர், பின்னணி பாடகர்கள் மனோ, அனுராதாஸ்ரீராம், நகைச்சுவை நடிகர் மயில்சாமி, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, காவல்துறை சூப்பிரண்டட் அரவிந்த், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பின்னணி பாடகர்கள், உள்ளூர் இசை கலைஞர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பாடகர்கள் எஸ்.பி.சைலஜா, மனோ, அனுராதாஸ்ரீராம் ஆகியோர் பக்தி பாடல்கள் பாடியதன் பின்னர் அவர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். #spb #அருணாசலேஸ்வரர்கோவில் #எஸ்பிபி #மோட்சதீபம் #பின்னணிப்பாடகர்கள் #சைலஜா #மனோ #அனுராதாஸ்ரீராம்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More