Home இலங்கை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

by admin

ட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக சந்தேகத்தில் ஒருவர் கைதானார். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட பகுதியில் ட்ரோன் கமராவை பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமாக நபர் ஒருவா் புகைப்படங்களை எடுப்பதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.

குறித்த தகவலுக்கமைய விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய விசேட அதிரடிப்படை குழுவினர் மேற்கொண்ட தேடுதலை அடுத்து  ட்ரோன் கமராவினை மீட்டதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் 33 வயதுடைய நபரையும் கைது செய்து திருக்கொவில் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த ட்ரோன் கமரா இயங்கு நிலையில் காணப்பட்டதுடன் அதன் கட்டுப்பாட்டு தொகுதி இன்னும் மீட்கப்படவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது.

நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றதனையடுத்து ட்ரோன் கமரா தொடர்பில் கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.உயர்பாதுகாப்பு வலயங்களில் குறித்த கமரா இயக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து ட்ரோன் கமராக்களையும் இலங்கையில் பயன்படுத்துவதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. #ட்ரோன்கமரா #தேசியபாதுகாப்பு #அச்சுறுத்தல் #கைது #உயிர்த்தஞாயிறு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More