Home இலங்கை தனபாலசிங்கம் குணசிங்கம் சடலமாக மீட்பு…

தனபாலசிங்கம் குணசிங்கம் சடலமாக மீட்பு…

by admin

வடமராட்சி கிழக்கு தம்பலகாமம் ஆற்றுப்பாதையில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பளை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (15.11.20) பிற்பகல் 2.15 மணியளவில் இடம்பெற்ற இந்தக் கொடூரச் சம்பவத்தில், செம்பியன்பற்று மாமுனையைச் சேர்ந்த 43 வயதுடைய தனபாலசிங்கம் குணசிங்கம் என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர் மீது தாக்குதல் நடத்தியவர் அல்லது நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பளை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#வெட்டுக்காயங்கள் #சடலமாகமீட்பு #வடமராட்சிகிழக்கு #தம்பலகாமம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More