Home இலங்கை சாவச்சேரியில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது

சாவச்சேரியில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது

by admin

சாவகச்சேரி காவல்துறைப் பிரிவில் கல்வயல், மட்டுவில் பகுதிகளில் கடந்த டிசெம்பர் 2ஆம் திகதி இரவு புரேவி புயலால் கடும் மழை பொழிந்து கொண்டிருந்த வேளை 7 வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பலில் இரண்டு பேர், மற்றும் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் உள்ளிடட மூவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி காவல்துறைப் பிரிவில் கல்வயல், மட்டுவில் பகுதிகளில் கடந்த டிசெம்பர் 2ஆம் திகதி இரவு புரேவி புயலால் கடும் மழை பொழிந்து கொண்டிருந்த வேளை 7 வீடுகளில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.  


வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளைப் பார்த்து கொள்ளையர்கள்
ஐவர் இந்தக் கைவரிசையைக் காண்பித்திருந்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மூவர் மட்டும் சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முகங்களை மறைத்தவாறு வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஐவர், வயோதிபர்களை அச்சுறுத்தி தாலிக்கொடி உள்ளிட்ட
15 பவுண் தங்க நகைகளும் 2 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டன என்று சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழான பிரதான காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்புகாவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அவர்களின் விசாரணைகளில் சுன்னாகம் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். 
சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளையிட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் பெண் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 7 தங்கப் பவுண் நகைகளும் 30 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன. 
அத்துடன், சந்தேக நபர்களின் உடமையிலிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொள்ளை கும்பலை சேர்ந்த  சந்தேக நபர்கள் இருவரும் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருமாக ஐந்து பேரும்  சாவகச்சேரி காவல் நிலையத்தில் மாவட்ட குற்றத்தடுப்புப் காவல்துறையினரால்  ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சான்றுப்பொருள்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் #சாவகச்சேரி #கொள்ளை #புரேவிபுயல் #கைது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More