Home உலகம் ஆப்கானிஸ்தானில் பெண் ஊடகவியலாளா் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் பெண் ஊடகவியலாளா் சுட்டுக்கொலை

by admin

ஆப்கானிஸ்தானில் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் ஊடகவியலாளா் ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாா். இவர் பணி நிமித்தம் ஜலாலாபாத் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்த போது காரை மறித்த இனந்தொியாதநபர்கள் அவரையும் அவரது காா்ச் சாரதியையும் நோக்கி சரமாரியாக சுட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளா் மலாய் மைவான்ட் சமூக ஆர்வலராகவும் இருந்து வந்த நிலையில் அவரது சமூக ஆர்வலராக இருந்து வந்த தாயார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இனந்தொியாத நபா்களால் சுட்டு கொல்லப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த ஒரு மாதத்தில் ஆப்கானிஸ்தானில் 2-வது ஊடகவியலாளா் கொல்லப்பட்டுள்ளார் என்பதுடன் இந்த கொலைக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. #ஆப்கானிஸ்தான் #ஊடகவியலாளா் #சுட்டுக்கொலை #சமூகஆர்வலா்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More