Home சினிமா 30 ஆண்டுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்த இசைஞானி

30 ஆண்டுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்த இசைஞானி

by admin

இசைஞானி இளையராஜா, சுமார் 30 ஆண்டுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார். தமிழில் கடந்த 1990-ம் ஆண்டு வெளிவந்த ‘கேளடி கண்மணி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வஸந்த் அதன்பின்னர் ‘நீ பாதி நான் பாதி’, ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’ போன்ற பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியிருந்தார்.

அடுத்ததாக அவா் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.


இந்நிலையில், தற்போது இயக்குனர் வஸந்த், புதிய படம் ஒன்றை இயக்கி அந்த படத்தை அவரே தயாரிக்கவும் உள்ளதாகவும் இந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் வஸந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் ‘கேளடி கண்மணி’ படத்தை அடுத்து சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் இளையராஜாவுடன் இணைந்து வஸந்த் பணிபுரிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


வஸந்த் மற்றும் இளையராஜா இணைந்த ‘கேளடி கண்மணி’ படத்தில் இடம்பெற்ற ‘மண்ணில் இந்த காதல்’ மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. #இசைஞானி_இளையராஜா #இயக்குனர்_வஸந்த் #கேளடிகண்மணி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More