Home இலங்கை யாழ்.பல்கலை மாணவர்களுக்கு பிணை!

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு பிணை!

by admin

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில்
50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தலா ஒரு ஆள் பிணையில் நீதிமன்று விடுத்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில்
நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

அத்துமீறி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தமை மற்றும் கலகம் விளைவித்தனர் என்று இரண்டு குற்றச்சாட்டுகள் மாணவர்கள் இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டன.

மாணவர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன், நடந்தவற்றை மன்றுரைத்து பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.

இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான்,
மாணவர்கள் இருவரையும் தலா 50 ஆயிரம் ரூபாய் ஆள் பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More