Home இலங்கை யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபியே அமைக்கப்படும் – மாணவர்கள் உறுதி

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபியே அமைக்கப்படும் – மாணவர்கள் உறுதி

by admin

யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவு தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதிபட கூறியுள்ளது. 


யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி சட்டவிரோதமானது என கூறி பல்கலைக்கழக  துணைவேந்தரின் உத்தரவில் கடந்த மாதம் 08ஆம் திகதி இடித்தழிக்கப்பட்டது. 


அதனை அடுத்து மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டத்துடன் , அரசியல் பிரதிநிதிகள்  பொதுமக்கள் மற்றும் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


அதனை அடுத்து எழுந்த எதிர்ப்பலையை அடுத்து 11ஆம் திகதி காலை தூபி மீள அமைப்பதற்கு என துணைவேந்தர் தலைமையில் மாணவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு , அடுத்து வந்த நாட்களில் தூபி கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. 


இந்நிலையில் கடந்த சனிக்கிழமை யாழ்.பல்கலை கழகத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் , தூபி விவகாரத்தில் நடைபெற்ற விடயங்களை விலாவரியாக குறிப்பிட்டு துணைவேந்தர் சிறிசற்குணராஜா அறிக்கை சமர்ப்பித்தார். 
அதனை தொடர்ந்து தற்போது அமைக்கப்படவுள்ள தூபியினை “அமைதி தூபி” எனும் பெயரில் அமைக்க பேரவை அனுமதி அளித்தது. 


அது தொடர்பில் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவிக்கும் போது , தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபி எனும் பெயரில் முன்னர் இருந்த அமைப்பிலையே மீள கட்டப்படும். அமைதி தூபி எனும் பெயரிலையோ அல்லது , வேறு வடிவங்களில்லையோ அமைக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதிபட கூறியுள்ளனர்.  #யாழ்_பல்கலை #முள்ளிவாய்க்கால்_நினைவுதூபி #மாணவர்கள் #அமைதிதூபி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More